பொள்ளாச்சியில் தபால் குறைகேட்பு கூட்டம் செப்டம்பர் 19-க்கு ஒத்திவைப்பு

பொள்ளாச்சியில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறவிருந்த தபால் குறைகேட்பு கூட்டம், பொதுவிடுமுறை காரணமாக செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தபால் கோட்டக் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் தபால்துறை சேவைகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியவும் அவ்வப்போது நடத்தப்படும் மக்கள் குறைகேட்பு கூட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கோட்ட அளவில் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 11:00 மணிக்கு குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பொதுவிடுமுறை காரணமாக இந்தக் கூட்டம் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி தபால் கோட்டக் கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் செப்டம்பர் 13 அன்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தபால்துறை சம்பந்தமான தங்களது குறைகளை எடுத்துரைக்கலாம். மேலும், தபால் சேவைகளை மேம்படுத்துவதற்கான கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...