ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மக்கள் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்தனர். அத்திப்பூ கோலம், பாரம்பரிய உடைகள் மற்றும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்வு ஆகியவை இடம்பெற்றன.



Coimbatore: கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான மலையாள மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மலையாள மக்கள் தங்களின் பாரம்பரிய உடைகளில் கோவிலுக்கு வந்தனர். கோவில் வளாகத்தில் கொடிக்கம்பத்தின் கீழே அத்திப்பூ கோலம் போடப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.



மலையாள மக்கள் தங்கள் வீடுகளிலும் அத்திப்பூ கோலமிட்டு சாமி தரிசனம் செய்து, பின்னர் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர். ஓணம் பண்டிகையின் போது மகாபலி மன்னன் பூவுலகிற்கு வருவதாக ஐதீகம் உள்ளது. அவரை வரவேற்கும் விதமாக 10 நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நாளில் பிறந்து சில மாதங்களான குழந்தைகளுக்கு முதல் முறையாக சோறு ஊட்டுவது ஐதீகம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.

கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும், குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...