கோவை ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத பெண் ரயில் விபத்தில் உயிரிழப்பு

கோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் அருகே, 30-35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில் விபத்தில் உயிரிழந்தார். காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.


Coimbatore: கோவை ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ரயில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தின் அருகே தண்டவாளத்தில் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று (செப்.14) மதியம் 2 மணி அளவில், கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார்.

இறந்த பெண்ணின் உடலில் பச்சை நிற சுடிதார் மற்றும் மஞ்சள் நிற பேண்ட் அணிந்திருந்தது. அவரது முகம் சிவப்பு நிறத்தில் வட்டமாக இருந்தது. மேலும், இடது தோள்பட்டையில் ஒரு மச்சம் இருந்தது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல் உதவி ஆய்வாளர் திருமதி மங்கையர்க்கரசி இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இறந்த பெண்ணின் அடையாளம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்பதால், பொதுமக்களின் உதவியை காவல்துறை நாடியுள்ளது.

இந்த பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 0422-2300043 என்ற எண்ணில் கோயம்புத்தூர் ரயில்வே காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...