மேட்டுப்பாளையம் அருகே கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை முயற்சி

மேட்டுப்பாளையம் அருகே அறிவொளி நகரில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிறுமுகை வனச்சரக பகுதியான சென்னா மலை கரடு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள், மலை அடிவார பகுதியான அறிவொளி நகர் பகுதியில் பொதுமக்கள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அடிக்கடி வேட்டையாடுவதால், மனிதர்களை தாக்கும் முன் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், சிறுமுகை வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். அறிவொளி நகர் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கூண்டில் நாய்களை வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த முயற்சி வெற்றி பெற்றால், அப்பகுதி மக்களின் அச்சம் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வனத்துறையினரின் இந்த நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...