திமுக அரசு தமிழகத்தை போதை கலாச்சாரமாக மாற்றிவிட்டது: பாஜக குற்றச்சாட்டு

பொள்ளாச்சி அருகே பாஜக மகளிர் அணி நிகழ்ச்சியில், திமுக அரசு டாஸ்மாக் கடைகளை மூடுவதாக கூறி, அதிக பார்களை திறந்து தமிழகத்தை போதை கலாச்சாரமாக மாற்றியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் கிராமத்தில் கோவை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வசந்த ராஜன், கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் உறுப்பினர்களை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், தற்போது வரை 16 ஆயிரம் பேர் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றப்படவில்லை. ஆனைமலையாறு, நல்லாறு திட்டம், தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் விநியோகம் செய்வோம் என கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. காயர் தொழிற்சாலைகளை வெள்ளை நிற பட்டியலில் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆரஞ்சு நிற பட்டியலில் மாற்றியது. எந்தத் தொழில் செய்தாலும் அவர்களுக்கு நெருக்கடியை கொடுத்து லஞ்சம் பெறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்," என்றார்.

"அரசு மதுபான கடைகளை படிப்படியாக மூடுவதாக சொல்லி விட்டு அதிக அளவில் தனியார் மதுபான கடைகளை திறந்து வருகின்றனர். இதனால் போதை கலாச்சாரம் அதிகரித்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கலவரம் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடைபெற்று வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்," என வசந்த ராஜன் குற்றம்சாட்டினார்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...