கொடநாடு காவலாளி கொலை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்.பி முரளிரம்பா பேட்டி

கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆதாரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் உதகை எஸ்.பி முரளிரம்பா கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சயான் என்பவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் சுந்தர்ராஜனிடம் சயான் உடல் நிலை குறித்து கேட்டறிந்த எஸ்.பி முரளிரம்பா பின்னர், சயானிடம் விசாரணை நடத்தினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சயானிடம் எஸ்.பி முரளிரம்பா விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளிரம்பா கூறுகையில், முதலில் சயானின் உயிர் மிகவும் முக்கியம். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சையில் சயான் முழு நினைவுடன் நலமுடன் உள்ளார்.

விசாரணையின் போது அவர் மெதுவாக பேசினார். முழு விசாரணைக்கு ஏற்றபடி அவர் உடல்நலம் இல்லை. அதே வேளையில் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழில் நுட்ப ரீதியாகவும் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என முரளிரம்பா கூறினார்.

இதைத்தொடர்ந்து, சயானை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது ஏன் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, சயானை கேரள போக்குவரத்துக் காவல்துறைதான் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்" என்றார். கூடலூரைச் சேர்ந்த சஞ்சீவன் என்பவருக்கும் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு பதிலளிக்க முரளிரம்பா மறுத்து விட்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...