உலக இருதய தினத்தையொட்டி கோவையில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மராத்தான்

கோவையில் செப்டம்பர் 29 அன்று உலக இருதய தினத்தையொட்டி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மராத்தான் நடைபெறுகிறது. இதய நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை (GKNM) சார்பில் உலக இருதய தினத்தையொட்டி "ரன் பார் லிட்டில் ஹார்ட்ஸ்" என்ற பெயரில் விழிப்புணர்வு மராத்தான் நடைபெறவுள்ளது. இந்த மராத்தான் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி காலை 5:30 மணியளவில் பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கும்.

இந்த நிகழ்வு இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மராத்தான் நிகழ்வுக்கான பதக்கம் மற்றும் டி-சர்ட் வெளியீட்டு விழா ஏற்கனவே கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

GKNM மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசுவாமி கூறுகையில், "கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் பதிப்பில் சுமார் 2,000 பேர் பங்கேற்றனர். அதில் கிடைத்த நிதியுதவியில் இதயம் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 29 குழந்தைகள் பயனடைந்தனர். இந்த ஆண்டு நடைபெறவுள்ள மராத்தானில் புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகளில் இருந்து குணமடைந்த குழந்தைகளும் பங்கேற்கவுள்ளனர்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "இந்த நிகழ்வில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்" என்றும் கூறினார். இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ticketprix.com என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் அல்லது 97900 72303 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...