உலக இருதய தினத்தையொட்டி கோவையில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மராத்தான்

கோவையில் செப்டம்பர் 29 அன்று உலக இருதய தினத்தையொட்டி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மராத்தான் நடைபெறுகிறது. இதய நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை (GKNM) சார்பில் உலக இருதய தினத்தையொட்டி "ரன் பார் லிட்டில் ஹார்ட்ஸ்" என்ற பெயரில் விழிப்புணர்வு மராத்தான் நடைபெறவுள்ளது. இந்த மராத்தான் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி காலை 5:30 மணியளவில் பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கும்.

இந்த நிகழ்வு இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மராத்தான் நிகழ்வுக்கான பதக்கம் மற்றும் டி-சர்ட் வெளியீட்டு விழா ஏற்கனவே கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

GKNM மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசுவாமி கூறுகையில், "கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் பதிப்பில் சுமார் 2,000 பேர் பங்கேற்றனர். அதில் கிடைத்த நிதியுதவியில் இதயம் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 29 குழந்தைகள் பயனடைந்தனர். இந்த ஆண்டு நடைபெறவுள்ள மராத்தானில் புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகளில் இருந்து குணமடைந்த குழந்தைகளும் பங்கேற்கவுள்ளனர்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "இந்த நிகழ்வில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்" என்றும் கூறினார். இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ticketprix.com என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் அல்லது 97900 72303 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...