கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை 2024-25 தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2024-25 கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 16 முதல் தொடங்குகிறது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே பெறப்படும்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 16, 2024 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் வாயிலாக 11 கல்வி வளாகங்களில் 34 துறைகளில் முதுகலைப் படிப்பும், 29 துறைகளில் முனைவர் பட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் (https://admissionsatpgschool.tnau.ac.in/) மூலமாக மட்டுமே பெறப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30, 2024 நள்ளிரவு 11.59 மணி வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை (வேளாண்மை) மற்றும் அதன் சார்ந்த படிப்புகளை முடித்த மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பிற்கும், முதுகலை (வேளாண்மை) அல்லது தோட்டக்கலை / M.Tech (வேளாண் பொறியியல்) முடித்த மாணவர்கள் முனைவர் பட்டப்படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு சான்றிதழ் (Provisional Degree Certificate) அல்லது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், பட்டப்படிப்பு சான்றிதழை சமர்பித்த பிறகே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

மாணவர்கள் முதுநிலை மாணவர் சேர்க்கை (2024-25) குறித்த தகவல் கையேட்டை படித்து, உரிய நேரத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 9489056710 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...