மேட்டுப்பாளையம் பாரதி நகரில் ரூ.17 லட்சம் மதிப்பிலான புதிய ரேஷன் கடை திறப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சியின் பாரதி நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான புதிய ரேஷன் கடையை சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் திறந்து வைத்தார்.


Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 31வது வார்டு பாரதி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் கலந்துகொண்டு ரேஷன் கடையைத் திறந்து வைத்தார்.



மேலும், பொதுமக்களுக்கு முதல் விற்பனையையும் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அமுதா, 31வது நகர்மன்ற உறுப்பினர் விஜயலட்சுமி மற்றும் அந்தப் பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் புதிய ரேஷன் கடை திறப்பு விழா, பாரதி நகர் பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் எளிதாக அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...