மேட்டுப்பாளையம் பாரதி நகரில் ரூ.17 லட்சம் மதிப்பிலான புதிய ரேஷன் கடை திறப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சியின் பாரதி நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான புதிய ரேஷன் கடையை சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் திறந்து வைத்தார்.


Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 31வது வார்டு பாரதி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் கலந்துகொண்டு ரேஷன் கடையைத் திறந்து வைத்தார்.



மேலும், பொதுமக்களுக்கு முதல் விற்பனையையும் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அமுதா, 31வது நகர்மன்ற உறுப்பினர் விஜயலட்சுமி மற்றும் அந்தப் பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் புதிய ரேஷன் கடை திறப்பு விழா, பாரதி நகர் பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் எளிதாக அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...