கோவை: மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

கோவை வடக்கு வட்டத்தில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தின் வடக்கு வட்டத்தில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கினார்.

பெரியநாயக்கன்பாளையம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் சுதன் சாய், கை மற்றும் கால்களில் குறைபாடுகளுடன் பிறந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.

இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று (20.09.2024) மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, சுதன் சாய்க்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்வில் தாட்கோ மேலாளர் கு.மகேஸ்வரி உடனிருந்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...