பொள்ளாச்சி அருகே வாடகை பாத்திர கடையில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்

பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியில் உள்ள வாடகை பாத்திர கடையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு பகுதியில் வாடகை பாத்திர கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் கருகி நாசமானது.

ஆழியாறு பகுதியைச் சேர்ந்த கஸ்தூரிராஜா என்பவர், வால்பாறை ரோடு பகுதியில் ஆழியாறு தபால் நிலையம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த ஒரு வருடமாக வாடகை பாத்திர கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நாகராஜ் என்பவர் இரவு தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

நேற்று நள்ளிரவில் நாகராஜ் வழக்கம் போல கடைக்குள் உறங்கிக் கொண்டிருந்தார். சுமார் ஒரு மணி அளவில் கடைக்குள் உள்ளே பிளாஸ்டிக் சேர்கள் தீப்பிடித்து எரிவதை பார்த்த நாகராஜ் வெளியே வந்து அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.



உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



ஆனால், அதற்குள் கடையிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டன.

இந்த சம்பவம் குறித்து ஆழியாறு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் ஆழியாறு பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...