கற்பகம் பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா: 2644 மாணவர்களுக்கு பட்டம்

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2644 மாணவர்கள் பட்டம் பெற்றனர். டாக்டர் A.வேலுமணி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.


கோவை: கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா 21.09.2024 சனிக்கிழமையன்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் கு.இராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச.வசந்தகுமார் முன்னிலை வகித்தார்.



விழாவில் தமயந்தி வசந்தகுமார், முதன்மைச்செயல் அலுவலர் க. முருகையா, துணைவேந்தர் டாக்டர் ப.வெங்கடாசலபதி, பதிவாளர் முனைவர் சு.இரவி, தேர்வாணையர் முனைவர் ப.பழனிவேலு மற்றும் முதன்மையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தைரோகேர் அமைப்பாளர் டாக்டர் A.வேலுமணி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.



அவரது உரையில், "பண்பட்ட கல்வியே சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை. தனிமனித ஒழுக்கத்திலும், சமுதாயப் பொறுப்புணர்விலும், திறன் மேம்பாட்டிலும் சிறந்த மாணவர்கள் உயர்ந்த சமுதாயத்தைக் கட்டமைக்கின்றனர். அவர்களது பெருமுயற்சிக்கு கல்வியே தலைச்சிறந்த கருவி. நாட்டின் உயர்வே அவர்களது கல்வியின் பெரும்பயன்" என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "மாணவர்கள் அத்தகைய பொதுநல நோக்கத்துடன் சிறந்த ஆளுமைகளாக மிளிர வேண்டும். புதிய கல்விக்கொள்கை முதலானவை திறன் மேம்பாட்டிற்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் துணைசெய்வதை மாணவர்கள் உணர வேண்டும். அவர்கள் தமது ஆய்வுப்பங்களிப்பின் வாயிலாக நாட்டின் அனைத்துத் துறைச்சார்ந்த வளர்ச்சிக்கும் ஆக்கம் சேர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய மாணவர்களின் அறிவும், ஆளுமையும் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட டாக்டர் A.வேலுமணி, "மாணவர்கள் இதனை உணர்ந்து அடிப்படைக் கல்வி, மருத்துவம் முதலானவற்றுடன் அறிவியல் ஆக்கமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் அனைத்து மக்களையும் சென்றடைவதற்கு பொதுநல நோக்கத்தில் உழைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.





இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2644 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.





அதில் 51 மாணவர்களுக்குத் தங்கப்பதக்கங்களும், பல்வேறு துறைகள் சார்ந்த 52 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டன.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...