கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: ஏர் ஹாரன் பயன்படுத்திய பேருந்துகளுக்கு அபராதம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. 90 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.



கோவை: கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.



ஆய்வின் போது, 90 டெசிபலுக்கு அதிகமாக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் கொண்ட பேருந்துகள் கண்டறியப்பட்டன.



இத்தகைய பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்தால் அவை உடனடியாக அகற்றப்பட்டன.



மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் இந்த ஆய்வு குறித்து பேசுகையில், "மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுரையின் பேரிலும், மாவட்டத்தில் பல்வேறு வாகனங்களில் ஏர் ஹாரன் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது," என்றார்.

"மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் நான்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து இந்த தணிக்கையை மேற்கொண்டனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தணிக்கையின் போது, அரசு பேருந்துகள் உட்பட 20 பேருந்துகள் அதிக டெசிபல் அளவு கொண்ட ஏர் ஹாரன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இந்த பேருந்துகளுக்கு ஆய்வறிக்கை வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



இத்தகைய விதிமீறல்களுக்கான அபராதத் தொகை 3,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாய் வரை இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...