'கீழடியில் புதிதாக ஒன்றும் கிடைக்கவில்லை' - புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன பேராசிரியர் சுப்பராயலு கருத்து

கோவையில் நடைபெற்ற தமிழ்நாட்டின் அண்மைக்கால அகாழாய்வுகள் குறித்த தேசியக் கருத்தரங்கில், கீழடி அகழாய்வு குறித்து புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் சுப்பராயலு முக்கிய கருத்துக்களை தெரிவித்தார்.



Coimbatore: கோவை குமரகுரு கல்வி வளாகத்தில் தமிழ்நாட்டின் அண்மைக்கால அகாழாய்வுகள் குறித்த இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் இன்று துவங்கியது. நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம், வானவராயர் பவுண்டேசன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த கருத்தரங்கின் நோக்கம், தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அண்மைக்கால அகழாய்வுகளில் கிடைத்த வரலாற்றுச் சான்றுகளைப் பகிர்ந்து கொள்வதும், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், கொங்கல்நகர் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்விற்கு களப்பயணம் செய்வதும் ஆகும்.



கருத்தரங்கின் முதல் நாளில், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் சுப்பராயலு, குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர், நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் இயக்குனர் ஜெகதீசன், தொல்லியல் துறை ஆளுமைகள், பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் இயக்குனர் ஜெகதீசன் பேசுகையில், "அகழாய்வுகள் சம்பந்தமான ஆய்வறிக்கைகள் வருவதற்கு தாமதம் ஏற்படுகிற இந்த சூழலில், அந்தத் துறை சார்ந்த ஆளுமைகளை பேசவைத்து செய்திகளை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலேயே, இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருப்பதாக" தெரிவித்தார்.



புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் சுப்பராயலு தனது உரையில், கீழடி அகழாய்வு குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், "கீழடியில் வீடுகள் இருந்ததற்கான அமைப்புகள் கிடைக்கவில்லை. அது ஒரு தொழில் சார்ந்த இடமாக இருந்திருக்கலாம். தொல்பொருள்களைப் பொறுத்தவரை, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருட்களோடு ஒப்பிடுகையில் கீழடியில் புதிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. கீழடிக்கு என்ன சிறப்பு என்று புரியவில்லை" என்று தெரிவித்தார்.



கருத்தரங்கின் தொடர்ச்சியாக, பல்வேறு தலைப்புகளின் கீழ் அமர்வுகள் நடைபெற்றன. இதில் தொல்லியல் துறை சார்ந்த ஆளுமைகள் உரை நிகழ்த்தினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...