கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு: லஞ்சம் வாங்க முயன்ற கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் கைது

திருப்பூர் மாவட்டம் போகலூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் உரங்களை வழங்கி வந்த இவர் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கருப்புசாமியுடன் மேலும் 2 பேர் மீதும் முறைகேடு வழக்கு பதியப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும், மாவட்ட நீதிமன்றத்திலும்  கருப்புசாமி வழக்கு தொடுத்தார். ஆனால், இரண்டு நீதிமன்றங்களும் கருப்புசாமியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டன. 

இதனை தொடர்ந்து, தன் மீதான துறை ரீதி விசாரணைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளரான வசந்தராஜ்-ஐ அணுகினார்.

இதற்காக வசந்தராஜ் ரூ.5 ஆயிரத்தை கருப்புசாமியிடம்  லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து, அவர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒரு தேநீர் கடைக்கு வந்தனர். மேலும், இரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கருப்புசாமியிடம் கொடுத்த அவர்கள், அவற்றை வசந்தராஜ்-இடம் கொடுக்குமாறு கூறினார்.

அப்போது, தேநீர் கடைக்கு வந்த வசந்தராஜ், கருப்புசாமியிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை லஞ்சமாக வாங்கினார். அங்கு மறைந்திருந்த போலீசார் கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளரான வசந்தராஜ்-ஐ கையும் களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வசந்தராஜ்_ஐ கைது செய்தனர்.

இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...