பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக வருகை அலுவல் காரணமாக இரத்து - பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக வருகை அலுவல் காரணமாக இரத்து செய்யப்பட்டு இருக்கலாம் எனவும், இதில் வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 3 நாட்கள் பயணமாக வருகின்ற 10ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர இருந்தார். சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் அமித்ஷா பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. 11 ம் தேதி கோவையில் நடைபெறும் அமித்ஷா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கோவை வந்தார்.

இந்நிலையில் திடீரென அமித்ஷாவின் தமிழக வருகை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை கிளம்பும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராசன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமித்ஷா வருகை அலுவல் காரணமாக இரத்து செய்யப்பட்டு இருக்கலாம் எனவும், வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

விரைவில் அமித்ஷாவின் தமிழக வருகை தேதி அறிவிக்கப்படுமெனவும், அப்போது பிரம்மாண்ட முறையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். 

மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

மேலும் மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள், பாதிக்கப்படும் ஏழை நோயாளிகள் பற்றி கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். தமிழக அமைச்சர் காமராஜ் மீது வழக்குபதிவு செய்ய உச்சநீதிமன்றம்  உத்தவிட்டும், வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நீதியை யாரும் மீறக்கூடாது எனவும், நீதிக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நீதியின் படி தமிழகத்தில் அனைத்தும் நடக்கிறதா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும், இதனை தமிழக முதலமைச்சர்கவனிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...