பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக வருகை அலுவல் காரணமாக இரத்து - பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக வருகை அலுவல் காரணமாக இரத்து செய்யப்பட்டு இருக்கலாம் எனவும், இதில் வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 3 நாட்கள் பயணமாக வருகின்ற 10ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர இருந்தார். சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் அமித்ஷா பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. 11 ம் தேதி கோவையில் நடைபெறும் அமித்ஷா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கோவை வந்தார்.

இந்நிலையில் திடீரென அமித்ஷாவின் தமிழக வருகை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை கிளம்பும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராசன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமித்ஷா வருகை அலுவல் காரணமாக இரத்து செய்யப்பட்டு இருக்கலாம் எனவும், வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

விரைவில் அமித்ஷாவின் தமிழக வருகை தேதி அறிவிக்கப்படுமெனவும், அப்போது பிரம்மாண்ட முறையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். 

மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

மேலும் மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள், பாதிக்கப்படும் ஏழை நோயாளிகள் பற்றி கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். தமிழக அமைச்சர் காமராஜ் மீது வழக்குபதிவு செய்ய உச்சநீதிமன்றம்  உத்தவிட்டும், வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நீதியை யாரும் மீறக்கூடாது எனவும், நீதிக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நீதியின் படி தமிழகத்தில் அனைத்தும் நடக்கிறதா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும், இதனை தமிழக முதலமைச்சர்கவனிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...