மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி கிராமப்புற பொதுமக்கள் மனு

கோவை, மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி கிராமப்புற ஊராட்சியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த கிராமப்புற பொதுமக்கள் மதுக்கரை ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். 

அந்த மனுவில், மலுமிச்சம்பட்டி கிராம ஊராட்சியில் இருக்கும் அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளால் ஊர்மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதாகவும், கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் சில பெண்கள் எனப் பலர் மதுவிற்கு அடிமையாகிவிட்டதாகவும். அதுமட்டுமல்லாமல், அருகாமையில் உள்ள கிராமத்து மக்கள் பலரையும் குடிநோயளிகளாகவும் ஆக்கிவிட்டதாகவும்.

 எனவே, இந்த மதுபானக்கடைகளால் கிராமத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதகவும், இந்த மதுக்கடைகளால் பெண்கள் மீதான வன்முறை, சாலை விபத்துக்கள் என மக்களுக்குப் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், இனியும் இந்த கடைகளால் கிராம மக்கள் பாதிப்படையக் கூடாது. எனவே ஊராட்சியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என கூறப்படிருந்தது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...