சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கோடை கால காய்கறி கண்காட்சி துவக்கம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடை கால விழாவை முன்னிட்டு தோட்டக்கலை சார்பில் ஒன்பதாவது காய்கறி கண்காட்சி தொடங்கியது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசுமுதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் துவக்கி வைத்தனர். 

இவ்விழாவில், பார்வையாளர்களை கவரும் வண்ணமாக 1500 கிலோ எடையுள்ள பல வண்ணங்களை கொண்ட குட மிளகாய்களை கொண்டு 25 அடி நீளம், 12 அடி உயரம், 6 அடி அகலம் உள்ள காய்கறி கப்பல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 500கிலோ எடையுள்ள மஞ்சள் மற்றும் பச்சை சுகினியை கொண்டு 10அடி உயர கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் பல மாவட்டங்களில் இருந்து பல்வேறு அரங்கங்கள் அமைப்பட்டு அதில் கரடி, முயல், மான், மயில் போன்ற உருவ அமைப்புகள் காய்கறிகளால் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நடைபெற்றது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த காய்கறிக் கண்காட்சியில் சுமார் 25000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இக்காட்சியை கண்டு ரசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.



Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...