விபத்துக்களுக்கு வழி வகுக்கிறதா ‘பஸ்-பே?

கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கோவை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதற்கட்டமாக கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 7 இடங்களை தேர்வு செய்து போலீசார் அங்கு ‘பஸ்-பே’ அமைத்தனர். நகர பேருந்துகள் பேருந்து நிறுத்தங்களில் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தடுக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில், ‘பஸ்-பே’க்களால் விபத்துகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருக்கும் நகர பேருந்துகள் திடீரென இடதுபுறம் இருக்கும் ‘பஸ்-பே’ நோக்கி திரும்பும் போது பேருந்தின் பின்புறம் வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிறு சிறு விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கோவை, ஜி.என்.மில்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘பஸ்-பே’வில் இது போன்ற விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. 

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த அமைக்கப்பட ‘பஸ்-பே’க்களால் தற்போது சிறு சிறு விபத்துகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. பொதுமக்கள் சிறிய அளவிலான காயங்கள் அல்லது, வாகனத்தில் கீறல் மட்டும் ஏற்படுவதால் புகார்களை அளிக்க தயங்கி வருகின்றனர். 

இந்த பிரச்சனையில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வை கொண்டுவர வேண்டும். ‘பஸ்-பே’ தொடங்குவதற்கு முன் சற்று தொலைவில் இருந்து பேருந்துகள் மட்டும் செல்லுமாறு சிறிய கற்களை வைத்து பாதை அமைத்தால் இந்த விபத்துக்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது’ என்றனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...