மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

மண் சரிவால் இரண்டு நாட்கள் நிறுத்தப்பட்ட மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை இன்று (அக்டோபர் 2) மீண்டும் தொடங்கியது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.



கோவை: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை இன்று (அக்டோபர் 2) காலை முதல் மீண்டும் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக மண் சரிவு காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கும், நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கும் தினமும் மலை ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இந்த ரயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் இயற்கை எழிலை ரசித்து வருகின்றனர்.



கடந்த செப்டம்பர் 29 அன்று இரவு நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், பர்லியாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டது.



இதனால் ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன, மரங்கள் சாய்ந்தன.

இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று (அக்டோபர் 1) மாலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்தன.

இதனைத் தொடர்ந்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் இன்று (அக்டோபர் 2) முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என அறிவித்தது.



இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காலை முதலே மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.



வழக்கம்போல் காலை 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் மலைப்பகுதியின் இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

Newsletter

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...