உடுமலை அருகே விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உடுமலை அருகே பொலிரோ வாகனமும் டெம்போ டிராவல்ஸும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலரும் காயமடைந்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொலிரோ வாகனமும் டெம்போ டிராவல்ஸும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 12 மணியளவில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து தியாகராஜன் (45), அவரது மனைவி பிரித்தி (40), மகன்கள் ஜெயப்பிரியன் (11), ஜீவப்பிரியன் (13) மற்றும் பெற்றோர் உள்ளிட்ட 6 பேர் கோவை மாவட்டம் தாமரைக்குளத்தில் நடந்த இறப்பு நிகழ்வுக்குச் சென்று திரும்பி வந்தனர்.



உடுமலை அருகே உள்ள கருப்புசாமி புதூர் பகுதியில், பாலக்காடு நோக்கி வந்துகொண்டிருந்த டெம்போ டிராவல்ஸுடன் அவர்கள் பயணித்த பொலிரோ வாகனம் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தியாகராஜன், அவரது மனைவி பிரித்தி, மகன் ஜெயப்பிரியன் மற்றும் தாய் மனோன்மணி (65) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



விபத்தில் படுகாயமடைந்த தியாகராஜனின் தந்தை நாட்ராயன் (75) மற்றும் மகன் ஜீவப்பிரியன் ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

டெம்போ டிராவல்ஸில் பயணித்த 23 பேரில் சுமார் 12 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் பாலக்காட்டிற்குச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த சோகமான சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...