கோவையில் அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி: தினமலர் அணி சாம்பியன்

கோவையில் அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் தினமலர் அணி, கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.


கோவை: கோவை மாநகர போலீஸ் மற்றும் 'ஸ்பார்க்கிளிங் ஈவென்ட்ஸ்' இணைந்து நடத்திய அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் தினமலர், தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ், மாநகர போலீஸ், மாவட்ட போலீஸ், விமானப்படை, மாநகராட்சி, கலெக்டர் அலுவலகம், வருமான வரித்துறை, 110 பட்டாலியன், வணிக வரித்துறை, மீடியா 11, கோவை பிரஸ் கிளப் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றன.

அக்டோபர் 9 அன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தினமலர் அணி, கோவை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற தினமலர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அணியின் துவக்க வீரர் விஜய் சிறப்பாக விளையாடி 60 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்தார். 20 ஓவர்களில் தினமலர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

பதிலுக்கு ஆடிய துணை கமிஷனர் அணி 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் டி.எல்.எஸ். முறைப்படி தினமலர் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தினமலர் அணியின் விஜய் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

கோவை மாவட்ட போலீஸ் அணி மூன்றாம் இடத்தையும், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை கமிஷனர் ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...