மேட்டுப்பாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஜ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஜ கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாதாந்திர மின் கட்டண கணக்கீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



கோவை: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஜ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அண்மையில் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.



உயர்த்தப்பட்ட மின் கட்டணம் உள்ளிட்ட வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



எஸ்.டி.பி.ஜ கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் உயர்த்தப்பட்ட வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும், மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...