உடுமலையில் விஜயதசமி: ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி வழிபாடு

உடுமலை அருகே திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் விஜயதசமி விழாவின் போது, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.



திருப்பூர்: விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் தங்களது மழலைச் செல்வங்களை நெல்மணிகளில் "ஓம் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்" என எழுத வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நாளில் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி கற்கத் தொடங்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினால், அவர்கள் மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.



சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன் ஆரத்தி காட்டி, அன்று சில வரிகளாவது படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்ற நம்பிக்கையும் உள்ளது.





இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...