மோசடி வழக்கில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரின் மாமனார் உள்பட இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் முத்துசாமி மகன் துரைசாமி. இவரின் சகோதர்கள் சுந்தரம் மற்றும் தனபால். இந்த மூவரும் பங்குதாரராக உள்ள வணிக வளாகம் கோவை அவிநாசி சாலையில் உள்ளது.இந்நிலையில் வணிக வளாகத்தின் ஒப்பந்த பத்திரத்தில் துரைசாமியின் பெயரை நீக்கி புதியதாக பத்திரத்தை சுந்தரம் மற்றும் தனபால் தயார் செய்துள்ளனர். மேலும், துரைசாமிக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்தனர். ஒப்பந்த பத்திரத்தில் பெயரை நீக்கியும், வணிக வளாகம் மூலம் கிடைக்கும் வருவாயை தனக்கு தராமல் மோசடி செய்ததாக துரைசாமி, கடந்த 2001-ஆம் ஆண்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் நம்பிக்கை மோசடி,ஒப்பந்தத்தை அழித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கோவை நீதித்துறை நடுவர் எண் 3-இல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி வேலுசாமி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில், சுந்தரம், தனபால் ஆகியோர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 3 ஆண்டு கடுங் காவல் சிறை, தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்தார். இதில், சுந்தரம், தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜய் பாஸ்கரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...