கோவை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா

கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று பாரம்பரிய கலைகளை நிகழ்த்தினர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கிடசாமி சாலையில் உள்ள வேதபாடசாலை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் (Sharathkala Navarathiri Mahotsavam) திருவீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது.



இந்நிகழ்வை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.



திருவீதி உலாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டனர்.



அவர்கள் கொம்பு, நையாண்டி மேளம், செண்டை மேளம், காவடியாட்டம், தெய்யம், காளி ஆட்டம், திரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை நிகழ்த்திக்காட்டினர்.



இந்த ஊர்வலம் கோவிலில் இருந்து தொடங்கி திருவேங்கடசாமி சாலை, தடாகம் சாலை, பெரியசாமி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



மேலும், பல்வேறு வேடம் அணிந்து கொண்டு நடனம் ஆடியபடி ஊர்வலமாகச் சென்ற கலைஞர்களை அனைவரும் மிகுந்த வியப்புடன் பார்த்து ரசித்தனர். ஊர்வலம் சென்ற பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் நடைபெற்ற சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா, கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தை ஒன்றிணைத்து கொண்டாடிய ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...