கோவையில் தெரு நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் தெரு நாய் கடித்த 23 வயது இளம்பெண், ரேபிஸ் தடுப்பூசி போடாததால் நோய் தாக்கி உயிரிழந்தார். மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை சரவணம்பட்டி எல்ஜிபி நகரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தெரு நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்த விவரம்:

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருந்தார் அந்த இளம்பெண். அப்போது அங்கு இரண்டு தெரு நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில், அந்த நாய்களில் ஒன்று இளம்பெண்ணைக் கடித்துவிட்டது.

நாய் கடித்த பின்னரும், அந்த இளம்பெண் ரேபிஸ் பாதிப்புக்கான தடுப்பூசி செலுத்தாமல் விட்டுவிட்டார். இந்நிலையில், அண்மையில் அப்பெண்ணுக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டபோது, அவருக்கு ரேபிஸ் நோய்த் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல், அக்டோபர் 11 அன்று அப்பெண் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெரு நாய்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், ரேபிஸ் தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...