கோவை சிறுவாணி அணை நீர்மட்டம் 43.49 அடியாக உயர்வு: தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43.49 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை தமிழக, கேரள அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 43.49 அடியாக உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இந்த அணையில் தேக்கப்படும் நீர், கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு மொத்தத் தேவை 265 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) தண்ணீராக உள்ளது. இதில் 101.40 எம்.எல்.டி தண்ணீர் சிறுவாணி குடிநீர் திட்டத்திலிருந்து எடுத்து கோவை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது. மொத்தம் 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் நீர்மட்டம் தற்போது (அக்டோபர் 16) 43.49 அடியாக உயர்ந்துள்ளது.

அண்மையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 60 மில்லி மீட்டரும், அடிவாரத்தில் 14 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 9 கோடியே 90 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அணைப் பகுதியில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவை தமிழக மற்றும் கேரள மாநில அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த மழை தொடர்ந்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...