வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மழையில் நனைந்து கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
கோவை: வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை புதன்கிழமை காலையிலும் தொடர்ந்ததால், பள்ளிக்குச் சென்ற மாணவர்கள், அலுவலகம் மற்றும் பணிக்குச் சென்றோர், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் என பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சின்னக்கல்லார், சின்கோனா, ஈட்டியார், சிறுகுன்றா, காஞ்சமலை, வெள்ளமலை, பன்னிமேடு, சேக்கல்முடி, சோலையாறு அணை, மலுக்கப்பாறை, கருமலை, பச்சமலை, கவர்க்கல், தளனார், சக்தி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் பரவலாக மழை பதிவானது. இதனால் காலை நேரத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், பனிமூட்டமும் நிலவியதால் வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையுடன் பயணித்தனர்.

மழையால் தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் மழையிலேயே பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல், பள்ளி மாணவர்கள் குடை மற்றும் மழைக்கோட்டுகளுடன் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.
மழை பதிவின்படி, சின்னக்கல்லாரில் 27 மி.மீ., சோலையாறு அணை பகுதியில் 24 மி.மீ., வால்பாறையில் 21 மி.மீ., சின்கோனாவில் 16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே, வால்பாறையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ள சோலையாறு அணைக்கு 853.30 கனஅடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. 165 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 83 அடி நீர் இருப்பு உள்ள நிலையில், அணையிலிருந்து 1,365 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், வால்பாறை மலைப்பகுதிகளில் மேலும் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
சின்னக்கல்லார், சின்கோனா, ஈட்டியார், சிறுகுன்றா, காஞ்சமலை, வெள்ளமலை, பன்னிமேடு, சேக்கல்முடி, சோலையாறு அணை, மலுக்கப்பாறை, கருமலை, பச்சமலை, கவர்க்கல், தளனார், சக்தி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் பரவலாக மழை பதிவானது. இதனால் காலை நேரத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், பனிமூட்டமும் நிலவியதால் வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையுடன் பயணித்தனர்.
மழையால் தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் மழையிலேயே பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல், பள்ளி மாணவர்கள் குடை மற்றும் மழைக்கோட்டுகளுடன் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.
மழை பதிவின்படி, சின்னக்கல்லாரில் 27 மி.மீ., சோலையாறு அணை பகுதியில் 24 மி.மீ., வால்பாறையில் 21 மி.மீ., சின்கோனாவில் 16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே, வால்பாறையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ள சோலையாறு அணைக்கு 853.30 கனஅடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. 165 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 83 அடி நீர் இருப்பு உள்ள நிலையில், அணையிலிருந்து 1,365 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், வால்பாறை மலைப்பகுதிகளில் மேலும் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.