திருப்பூரில் கனமழை: சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் மிதந்த பிளாஸ்டிக் பாட்டில்கள்

திருப்பூரில் மாலை 3 மணி நேரம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்றன.


திருப்பூர்: திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பூரில் மாலை சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து சாலைகளில் ஓடியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பழ வஞ்சிபாளையம், முத்தையன் நகர், பிச்சம்பாளையம், அங்கேரிபாளையம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தாங்களாகவே மழைநீரை வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

காந்திநகர் அடுத்த ஃபயர் சர்வீஸ் காலனி பகுதியில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய நீரும் மழைநீரும் கலந்து அப்பகுதி சாலைகளில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.



இந்த நீரில் ஏராளமான குப்பைகளுடன் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்றன. இக்காட்சி அங்கிருந்தவர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.



அப்பகுதி பொதுமக்கள் வெளியே நின்று குப்பைகள் தங்கள் வீட்டிற்குள் நுழையாதவாறு குச்சிகளை வைத்து தடுத்து மழைநீரில் இருந்து தங்களை காத்துக் கொண்டனர். இச்சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...