வடகிழக்கு பருவமழை: கோவையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கோவையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு. மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் இன்று (அக்.16) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயமுத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மாநகராட்சி ஆணையரின் அன்பான வேண்டுகோள், தற்போது கோயமுத்தூர் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழைக்காலம் தீவிரம் அடைந்துள்ளதால், காய்ச்சல் (டெங்கு காய்ச்சல் உட்பட) பரவுதவற்கு சாதகமான காலநிலை நிலவுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி முதல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 14ம் தேதி 52 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 3091 பேர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 82 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

15ம் தேதி 37 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 2534 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 35 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 16ம் தேதி 71 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 3920 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 89 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பருவமழைக்காலம் முடியும் வரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு பருவமழை காலம் குறித்தும், காய்ச்சல் பரவுதலை தடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்தம் வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுக்கள் பரவாமல் தடுப்புப்பணிகளை கையாள்வது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவ/மாணவியர்களில் காய்ச்சல் ஏற்படும்போது அது குறித்து சம்பந்தப்பட்ட வார்டு மண்டல சுகாதார அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்கள் காய்ச்சல் தடுப்புப்பணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் ஏற்படின் மருந்தகங்களில் மருந்துகள் வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து, உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்/மருத்துவமனைகளில் தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும், தினசரி குடிநீரை காய்ச்சி ஆறவைத்து பருகுமாறும் மாநகราட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொது மக்கள் வசிக்கும் வீடுகளிலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் மழைநீர் வடிகால் முறையாக பராமரிப்பு செய்திடல் வேண்டும் என்றும், பருவமழைக்காலத்தில் காய்ச்சல் முகாம்களில் கலந்து கொண்டு காய்ச்சல் பரவாமல் தவிர்க்கும்படியும் மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...