அவினாசி சாலையில் மழைநீர் வெளியேற்றும் பணியை ஆய்வு செய்த ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் அவினாசி சாலையில் மழைநீர் வெளியேற்றும் பணியை ஆய்வு செய்தார். சாலையோர வடிகால்களில் சிறு துளைகள் இடும் பணி குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் இன்று (17.10.2024) மத்திய மண்டலத்திற்குட்பட்ட அவினாசி சாலை பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில், சாலையின் இரு புறங்களிலும் உள்ள வடிகால்களின் பக்கவாட்டில் சிறிய அளவிலான துளைகள் இடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



ஆய்வின் போது, துளைகளிடும் பணியை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் தனபாலன் மற்றும் பிற மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...