பி.என்.புதூரில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்; வே.கௌதம்குமார் நினைவஞ்சலி

கோவை பி.என்.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மார்ச் 22-ல் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவு நாளும், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் வே.கௌதம்குமாரின் முதலாமாண்டு நினைவு நாளும் அஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது.


Coimbatore: கோவை மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள பி.என்.புதூரில் விடுதலைப் போராட்ட மாவீரர்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவு நாளும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவராக பணியாற்றிய வே.கௌதம்குமாரின் முதலாமாண்டு நினைவு நாளும் சனிக்கிழமை (மார்ச் 22) சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவஞ்சலி நிகழ்வில், விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.







நிகழ்ச்சிக்கு பி.என்.புதூர் கிளையைச் சேர்ந்த விதாத் தலைமை தாங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான K.சாந்தி, மண்டல செயலாளர் N.சந்திரன், AIYF மண்டல தலைவர் புஷ்பராஜ், மாதர் சங்க மண்டல செயலாளர் செல்வி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.







அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட தலைவராக பணியாற்றிய தோழர் வே.கௌதம்குமார் 2024-ஆம் ஆண்டு சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். சிகிச்சையில் இருந்தபோதிலும் பலனளிக்காததால் மார்ச் 22-ல் அகால மரணமடைந்தார்.







விடுதலைப் போராட்ட மாவீரன் பகத்சிங் பிறந்த நாளில் பிறந்து, அதே மாவீரன் தூக்கிலிடப்பட்ட நாளில் உயிரிழந்த தோழர் கௌதம்குமார், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கிய அவரது தியாக உணர்வு பலரை உந்துதல் அளித்துள்ளது.

1931-ஆம் ஆண்டு மார்ச் 23-ல் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர். இந்திய விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக திகழ்ந்த இவர்களின் தியாகம் இன்றும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...