கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம், skating செய்தவாறு பங்கேற்றனர். வாக்குவீரன் இருவாச்சி பறவையும் இடம்பெற்றது.


Coimbatore: ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.

வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு சார்பிலும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், சிலம்பம் மற்றும் skating செய்தவாறும் பேரணி மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இந்த வாக்கத்தான் நிகழ்வில் தேர்தல் அடையாளச் சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்ட வாக்குவீரன் இருவாச்சி பறவையும் இடம்பெற்றிருந்தது.

தேர்தல் நாளன்று அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றும், முதல் முறை வாக்களிப்பவர்கள் நன்கு சிந்தித்து கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் தெரிவித்தனர். அப்போதுதான் சிறந்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் இளைஞர்களிடையே வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...