பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். திருத்தேரோட்டம் ஐந்தாம் நாளில் நடைபெற இருக்கிறது.


Coimbatore: தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.




முதல் நாளான இன்று வேள்விப்பூசை நடத்தி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. திருப்பூரைச் சார்ந்த ஸ்ரீ வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை MSP Groups சார்ந்தவர்கள் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றி துவக்கி வைத்தனர்.




வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு பக்தியுடன் பூஜை செய்து காப்புக் கட்டி, கொடிமரம் வில்வ மாலையால் அலங்கரிக்கப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வெள்ளியங்கிரி ஆண்டவரை மனம் உருகி தரிசித்தனர். 2006 ஆம் ஆண்டு கொடிமரம் அமைக்கப்பட்டது முதல் கொடியேற்றும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.




தொடர்ந்து வேள்விப்பூசை, அபிஷேக திருவீதி உலா, திருக்கல்யாணம், நடராசர் அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் நாள்தோறும் நடைபெற இருக்கின்றன. ஐந்தாம் நாள் அன்று வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக பக்தி பரவசத்துடன் நடைபெறும்.




ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமி வடம் பிடித்து தேரை இழுத்துச் செல்ல உள்ளனர். திருவிழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




புண்ணியம் தேடித் தரும் சக்தி வாய்ந்த பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு பக்தர்கள் திரளாக வரவேண்டும் என அறக்கட்டளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த பங்குனி உத்திரம் திருவிழா தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்களை ஈர்க்கும் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும்.


Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...