“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு” – கருப்புக்கொடி ஏற்றிய செந்தில் பாலாஜி..!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றி திமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கருப்புக்கொடி ஏற்றி தனது கண்டனத்தை பதிவு செய்தார்.


கோவை: மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதா, தென்னிந்திய மாநிலங்களின், குறிப்பாக தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பறிக்கும் ஒரு “வரலாற்றுத் துரோகம்” என்று சாடிய முதலமைச்சர், நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இன்று (ஏப்ரல் 16, 2026) தமிழகம் முழுவதும் வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கும் கட்சியினருக்கும் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏற்றி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கரூரில் கருப்புக்கொடி ஏற்றிய செந்தில் பாலாஜி, “அன்று இந்திக்கு எதிராக பற்றிய தீ, இன்று இந்தியாவுக்காக பற்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தொகுதி மறுவரையறை (Delimitation) என்று தமிழ்நாட்டையும் தமிழர்களையும் தாக்கிடும் ஒன்றிய அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக கூட்டணியையும் கண்டித்து, தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கரூரில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு நடத்தப்பட்டது.

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு… அன்று இந்திக்கு எதிராக பற்றிய தீ, இன்று இந்தியாவுக்காக பற்றுகிறது… திக்கெட்டும் திராவிட தீ பரவட்டும்… டெல்லி பணியும் வரை இந்த தீ அணையாது…” என்று பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...