பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்தனுக்கு, முழு ஆதரவு அளிப்பதாக தேவாங்க செட்டியார் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு.


Coimbatore: பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேவாங்க செட்டியார் சமூகத்தின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் பேசிய தேவாங்க செட்டியார் சமூக பிரதிநிதிகள், கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். குறிப்பாக, நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்கள், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளதாக கூறினர்.

இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்தியானந்தனுக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் முழு ஆதரவு அளிப்பதாக கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.



மேலும், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட உள்ளதாக தெரிவித்த அவர்கள், இந்த முறை திமுகவின் வெற்றிச் சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க உள்ளதாகவும் உறுதியளித்தனர்.

திமுக மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதி திமுக பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் நித்தியானந்தன், நகர்மன்ற தலைவர் சியாமளா, பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தேவாங்க செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.


Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...