கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


Coimbatore: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர், வானதி சீனிவாசன், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது வெற்றிக்காக குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக தேர்தல் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.



இன்று, வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசன், வடக்கு தொகுதியில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் வானதி சீனிவாசன் மேற்கொண்ட மக்கள் பணிகளை எடுத்துரைத்து, மீண்டும் தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.



வாக்கு சேகரிப்பின் போது, அவர்களதுகுறைகளையும் கேட்டறிந்த அவர், “வானதி விரைவில் குணமடைந்து உங்கள் சேவையைத் தொடருவார்” என உறுதி அளித்தார்.



மறுபுறம், வானதி சீனிவாசனின் மகன்களான ஆகாஷ் மற்றும் கைலாஷ் ஆகியோர் இளைஞர் அணியினருடன் இணைந்து தொகுதி முழுவதும் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.



வேட்பாளர் நேரடியாக களத்தில் இருக்க முடியாத சூழலில், அவரது கணவரும் மகன்களும் இணைந்து அந்த வெற்றிடத்தை நிரப்பி வருவது பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...