தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
Coimbatore: துடியலூர் அரவான் திடல் பகுதியில், மத்திய அரசின் அஞ்சலகம் எதிரில் திமுக துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், மசோதா நகல்களை எரித்தும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திமுக துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, பகுதி கழக செயலாளர் அருள்குமார் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில், துடியலூர் திமுக அலுவலகத்தில் இருந்து கருப்பு உடையணிந்து, கைகளில் கருப்புக்கொடி ஏந்தியவாறு மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். பின்னர் அரவான் திடல் பகுதியில் உள்ள மத்திய அரசின் அஞ்சலகம் முன்பு திரண்டு, மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, மசோதா நகலை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

வட்டக் கழக செயலாளர்கள் தமிழ்நிதி மற்றும் இமயவரம்பன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி தோழர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், மசோதா நகல்களை எரித்தும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திமுக துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, பகுதி கழக செயலாளர் அருள்குமார் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில், துடியலூர் திமுக அலுவலகத்தில் இருந்து கருப்பு உடையணிந்து, கைகளில் கருப்புக்கொடி ஏந்தியவாறு மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். பின்னர் அரவான் திடல் பகுதியில் உள்ள மத்திய அரசின் அஞ்சலகம் முன்பு திரண்டு, மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, மசோதா நகலை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
வட்டக் கழக செயலாளர்கள் தமிழ்நிதி மற்றும் இமயவரம்பன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி தோழர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.