ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். 24 திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலைக்கு வாக்கு கோரினார். ஒப்புட்டு சாப்பிட்டு சாமானிய மக்களுடன் கலந்துரையாடினார்.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் AIADMK வேட்பாளராக K.R. Jayaram போட்டியிடுகிறார். தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இவருக்கு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.




AIADMK பொதுச்செயலாளர் Edappadi Palaniswami மற்றும் BJP மாநிலத் தலைவர் Annamalai ஆகியோர் K.R. Jayaramஐ ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட நிலையில், நேற்று வேட்பாளர் ஆவாரம்பாளையம் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.




ஆவாரம்பாளையம் காய்கறி சந்தைக்கு சென்ற K.R. Jayaram, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தான் இந்த தொகுதிக்கு வைத்துள்ள 24 திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், ஒரு தேங்காய் கடையில் அமர்ந்து கடைக்காரருடன் இணைந்து தேங்காய் விற்பனையில் ஈடுபட்டார். அங்கு வந்த மக்களிடம் நேரடியாக பேசி ஆதரவு திரட்டினார்.




பின்னர் சந்தையில் உள்ள ஒரு கடையில் ஒப்புட்டு வாங்கி சாப்பிட்டு, காய்கறி சந்தைக்கு வந்த மக்களிடம் ஆதரவு திரட்டினார். சிங்காநல்லூர் MLA K.R. Jayaramஇன் இந்த செயல் சந்தையில் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.




சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட K.R. Jayaram பேசும்போது, "சிங்காநல்லூர் தொகுதியில் நான் MLAஆக இருந்தபோது எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன். தற்போது மீண்டும் வெற்றி பெற்று MLAஆனதும், இந்த தொகுதிக்கு நிறைவேற்றுவதற்கு என்று 24 திட்டங்களை வைத்துள்ளேன்" என்றார்.




"MLAவாக தேர்ந்தெடுக்கப்பட்டதும், நான் வைத்துள்ள அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து நிறைவேற்றி, சிங்காநல்லூரை சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்" என்று வாக்குறுதி அளித்தார். வேட்பாளரின் இந்த எளிமையான அணுகுமுறை வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...