ஆனைமலை வனப்பகுதியில் வசிக்கும் மக்களை ஒருமையில் பேசிய வட்டாட்சியர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு



கோவை மாவட்டம் ஆனைமலை வனப்பகுதிகளில் வாழும் மலைகிராம பழங்குடி மக்களை ஒருமையில் பேசிய வட்டாசியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

நீதிமன்ற உத்தரவு படி பழங்குடி சட்டமான வன உரிமை சட்டத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொள்ளாச்சி ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான வட்டாச்சியர் அலுவலகத்தில் சர் ஆட்சியர் தலைமையில் கடந்த 8 ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது.

ஆனைமலை வனப்பகுதிகளில் 17 மலைகிராமங்கள் உள்ள நிலையில், இந்த கூட்டம் தொடர்பான தகவலை மலை கிராம மக்களுக்கு தெரிவிக்காமல் அரசு அதிகாரிகள் ஒரு சில மலை கிராம மக்களை கொண்டு நடத்தி உள்ளனர். ஆனால், 17 கிராம மக்களையும் அழைத்தது போல் போலியாக பதிவிட்டுள்ளனர். 

மேலும், கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போல் மலைகிராம மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு பதிவும் நடைபெற்றுள்ளது. இது தெரிந்த பிறகு விண்ணப்பங்களை பெற மலை கிராம மக்கள் சென்று கேட்ட போது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான வட்டாச்சியர் சக்திவேல் "நீங்கள் மலைகிராமத்தில் இருப்பதால் எந்த பயனும் இல்லை. உங்களுக்கு படிக்க தெரியுமா" என பல்வேறு விதமாக ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான வட்டாச்சியர் சக்திவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மற்றும் பழங்குடியினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...