கோவையில் சென்சார் கழிப்பறைகள் விரைவில் அறிமுகம்


கோவை மாநகராட்சி விரைவில் சென்சார் அடிப்படையிலான நான்கு கழிப்பறைகளை ரேஸ் கோர்ஸ் மற்றும் காந்திபுரம் ஆகிய பகுதிகளில் 24 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்த திட்டமிட்டிருந்தது. தற்போது இந்த கழிப்பறையின் இறுதிப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

கோவை நகரின் முக்கிய பகுதியான காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகிலும் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதியிலும் இந்த சென்சார் அடிப்படையிலான கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளது.



இந்த கழிப்பறைகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக மொத்தம் நான்கு கழிப்பறைகளாக நிறுவப்பட்டுள்ளது. ஒரு கழிப்பறைகள் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூபாய் 24 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ளது.

கழிப்பறைகள் துருப்பிடிக்காதவாறு எஃகு உள்கட்டுமானிகள் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தொட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. 35 சதுரஅடி அளவில் ஒவ்வொரு கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த சென்சார் முறை கழிப்பறைகள் உபயோகிக்க நாணயம் பயன்படுத்த வேண்டும். நாணையங்கள் கொண்டு பயன்படுத்தினால் மட்டுமே கழிவறைகளின் கதவுகள் திறக்கப்படும். பின்னர் பயனர்கள் அனுமதிக்கப்படுவார்கள், தற்போது இதற்கு 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயங்களில் எதை பயன்படுத்துவது என மாநகராட்சி ஆணையர் முடிவு செய்வார் என தெரிகிறது.

இதற்கு மின்வசதிக்காக 600 வாட் தேவைப்படுகிறது. தற்போது இதற்கான மின் இணைப்புக்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. மின் இணைப்பு இல்லாததால் தற்போது பயன்பாட்டிற்கு வராத நிலையில் சென்சார் கழிவறைகள் உள்ளது. விரைவில் இந்த சென்சார் கழிவறைகள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...