பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் கட்டாயம் பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இல்லையேல் தகுதி சான்றிதழ் வழங்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.


Coimbatore: நாடு முழுவதும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசு மற்றும் தனியார் வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் கட்டாயம் பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் Coimbatore-ஐச் சேர்ந்த எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் Dr. ராஜசேகரன் என்பவர், சாலை விபத்துகளை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கடந்த 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து அவ்வப்போது சில உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

இந்நிலையில், பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணியர் பாதுகாப்பு குறித்து நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முக்கியமான உத்தரவை நேற்று பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

"எங்களுக்கு கிடைத்துள்ள புள்ளி விபரங்களின்படி, அரசு வாகனங்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே GPS எனப்படும் இருப்பிட கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது மிகுந்த கவலையளிக்கிறது. மத்திய மோட்டார் வாகன விதிகளை சரியாக அமல்படுத்தாத மாநில அரசுகளை கண்டிக்கிறோம்.

இனி, GPS கருவி மற்றும் Emergency பொத்தான் எனப்படும் அவசரகால பொத்தான் பொருத்தப்படாத வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் அல்லது போக்குவரத்து அனுமதி வழங்கப்படக்கூடாது.

கடந்த 2018 டிசம்பர் 21க்கு முன் பதிவு செய்யப்பட்ட பழைய வாகனங்களிலும் இந்த கருவிகளை பொருத்த, அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருத்தப்படும் கருவிகள் சரியாக செயல்படுவதை உறுதி செய்ய, அவற்றை மத்திய அரசின் 'வாஹன்' தரவுத்தளத்துடன் இணைத்து நிகழ்நேரத்தில் கண்காணிக்க வேண்டும்.

வாகன தயாரிப்பு நிறுவனங்கள், இனி வாகனங்களை விற்பனை செய்யும்போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும்.

தேசிய சாலை பாதுகாப்பு வாரியம் இன்னும் அமைக்கப்படாதது அதிருப்தி அளிக்கிறது. மத்திய அரசுக்கு கடைசி வாய்ப்பாக, மூன்று மாதங்களுக்குள் இந்த வாரியத்தை அமைக்க வேண்டும்" என உத்தரவிடுகிறோம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு பயணியர் பாதுகாப்பை வலுப்படுத்தும் திசையில் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் இரவு நேர பயணிகளின் பாதுகாப்பு கணிசமாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...