பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் கட்டாயம் பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இல்லையேல் தகுதி சான்றிதழ் வழங்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.


Coimbatore: நாடு முழுவதும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசு மற்றும் தனியார் வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் கட்டாயம் பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் Coimbatore-ஐச் சேர்ந்த எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் Dr. ராஜசேகரன் என்பவர், சாலை விபத்துகளை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கடந்த 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து அவ்வப்போது சில உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

இந்நிலையில், பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணியர் பாதுகாப்பு குறித்து நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முக்கியமான உத்தரவை நேற்று பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

"எங்களுக்கு கிடைத்துள்ள புள்ளி விபரங்களின்படி, அரசு வாகனங்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே GPS எனப்படும் இருப்பிட கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது மிகுந்த கவலையளிக்கிறது. மத்திய மோட்டார் வாகன விதிகளை சரியாக அமல்படுத்தாத மாநில அரசுகளை கண்டிக்கிறோம்.

இனி, GPS கருவி மற்றும் Emergency பொத்தான் எனப்படும் அவசரகால பொத்தான் பொருத்தப்படாத வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் அல்லது போக்குவரத்து அனுமதி வழங்கப்படக்கூடாது.

கடந்த 2018 டிசம்பர் 21க்கு முன் பதிவு செய்யப்பட்ட பழைய வாகனங்களிலும் இந்த கருவிகளை பொருத்த, அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருத்தப்படும் கருவிகள் சரியாக செயல்படுவதை உறுதி செய்ய, அவற்றை மத்திய அரசின் 'வாஹன்' தரவுத்தளத்துடன் இணைத்து நிகழ்நேரத்தில் கண்காணிக்க வேண்டும்.

வாகன தயாரிப்பு நிறுவனங்கள், இனி வாகனங்களை விற்பனை செய்யும்போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும்.

தேசிய சாலை பாதுகாப்பு வாரியம் இன்னும் அமைக்கப்படாதது அதிருப்தி அளிக்கிறது. மத்திய அரசுக்கு கடைசி வாய்ப்பாக, மூன்று மாதங்களுக்குள் இந்த வாரியத்தை அமைக்க வேண்டும்" என உத்தரவிடுகிறோம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு பயணியர் பாதுகாப்பை வலுப்படுத்தும் திசையில் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் இரவு நேர பயணிகளின் பாதுகாப்பு கணிசமாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...