பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் சரவணன், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் பகுதியில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மற்றும் ரயில் நிலைய பராமரிப்பு பணிகளை சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் சரவணன் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள், ரயில் நிலைய வளாகம், பார்சல் புக்கிங் பிரிவு, நிலைய அதிகாரி அலுவலகம், பணியாளர்களின் ஓய்வறைகள் மற்றும் பயணிகள் காத்திருப்போர் அறைகள் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ரயில் நிலையச் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் போஸ்டர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும், ரயில்வே பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பலகைகளை பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் அமைக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் ஆய்வு செய்த அவர், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...