பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் சரவணன், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் பகுதியில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மற்றும் ரயில் நிலைய பராமரிப்பு பணிகளை சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் சரவணன் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள், ரயில் நிலைய வளாகம், பார்சல் புக்கிங் பிரிவு, நிலைய அதிகாரி அலுவலகம், பணியாளர்களின் ஓய்வறைகள் மற்றும் பயணிகள் காத்திருப்போர் அறைகள் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ரயில் நிலையச் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் போஸ்டர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும், ரயில்வே பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பலகைகளை பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் அமைக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் ஆய்வு செய்த அவர், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...