கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கைதிகள் உட்பட 4 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை:

கோவை மத்திய சிறையில் மகேஷ் @ மகேந்திரன் (26), சுராளி @ சுரேந்திரன் (22), கலாநிதி @ அபிவிஷ்ணு (27) ஆகியோர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்காக சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து அனுமதி பெற்றிருந்தார்.

அதன்படி, கடந்த 12ஆம் தேதி கோவை மத்திய சிறைக்கு வந்த நவீன், கைதிகளுக்கு வழங்குவதற்காக வர்க்கி உள்ளிட்ட தின்பண்டங்களை கொண்டு வந்துள்ளார். அவற்றை மகேஷ் @ மகேந்திரனிடம் வழங்குமாறு கூறி சிறைக் காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.

சிறை விதிமுறைகளின்படி, கைதிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது வர்க்கி பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.24 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கோவை மத்திய சிறை ஜெயிலர் திருமலை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், NDPS சட்டம் மற்றும் சிறைச்சாலை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கஞ்சா கடத்த முயன்ற நவீன் மற்றும் அதை பெற முயன்ற கைதிகள் மகேஷ் @ மகேந்திரன், சுராளி @ சுரேந்திரன், கலாநிதி @ அபிவிஷ்ணு ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...