கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல்ஏ விஜய பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிய முதல்வருக்கு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித்துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டல பகுதிகளில் கைத்தறி, விசைத்தறி, நூல் உற்பத்தி உள்ளிட்ட ஏராளமான ஜவுளி சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், இப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ விஜய பாலாஜிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாநில செயலாளர் கந்தவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“தமிழகத்தில் 1.60 லட்சம் மின் இணைப்புகள் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள், ஒரு லட்சத்திற்கும் குறைவான கைத்தறிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தானியங்கி தறிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 2 கோடி மீட்டருக்கும் அதிகமான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு அமைச்சர் நியமிக்கும்போது கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-க்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று, ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ விஜய பாலாஜியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக நியமித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்கிறது. மேலும், கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய அமைச்சராக பொறுப்பேற்ற விஜய பாலாஜியை சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். அப்போது ஜவுளித்துறை வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்” என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...